நம்மாழ்வார் நினைவு தினம் பாரம்பரிய விவசாய திருவிழாவாக கொண்டாட்டம்
12/31/2021 12:39:44 AM
பேராவூரணி,டிச.31: பேராவூரணியை அடுத்த ஓட்டங்காடு ஊராட்சி மாரியம்மன் கோயில் திடலில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஒட்டங்காடு, நடுவிக்குறிச்சி, நவக்கொல்லைக்காடு, ஊரணிபுரம், உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட, பாரம்பரிய இயற்கை விவசாய திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாணவ, மாணவிகளின் சிலம்பாட்டம், அடிமுறை குத்து வரிசை, வேல் கம்பு, ஒற்றை வால், இரட்டை வால், சுருள் வாள், மான் கொம்பு. உள்ளிட்ட தற்காப்புக்கலை மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இயற்கை விவசாயத்தைப் பற்றி மாணவ, மாணவிகள் பேசினர். சிறப்பாக பேசியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனியார் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஐம்பொன்சிலைகள் ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி
8வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு
இன்று நடக்கிறது சொத்து முன்விரோத தகராறு: பெரியப்பா கல்லால் குத்திக் கொலை
விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்: கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி: 142 மனுக்கள் பெறப்பட்டது
பாபநாசம் அரசு பெண்கள் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நீதிபதி பாராட்டு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!