விஷ கிழங்கு சாப்பிட்ட முதியவர் பரிதாப பலி
12/28/2021 6:54:59 AM
காரிமங்கலம், டிச.28: காரிமங்கலம் அருகே விஷ கிழங்கு சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரிமங்கலம் அடுத்த பத்தலஅல்லியை சேர்ந்தவர் முத்து(70), விவசாயியான இவர், அப்பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு, குளிருக்காக தோட்டத்தில் இருந்த காய்ந்த செடிகளை பற்றவைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அதிலிருந்த கிழங்கு ஒன்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்
ஒகேனக்கல் காவிரியில் ஆண் சடலம் மீட்பு
சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை
மாவட்டத்தில் குழந்தை திருமணம் இல்லாத நிலை உருவாக்க ஒத்துழைப்பு தரவேண்டும்
பயறு வகை பயிர்களில் விதைப்பண்ணை அமைத்தால் கூடுதல் லாபம் பெறலாம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்