நெல் விற்பனையை ஆன்லைன் பதிவு ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
12/28/2021 3:58:50 AM
தஞ்சை,டிச.28: தமிழக அரசின், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய ஆன்லைன் பதிவு கட்டாயம் என்பதை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன் கண்டன உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர் பழனி அய்யா, கோவிந்தராஜ், முனியாண்டி, விவசாயிகள் சங்க அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கருப்பையன், தஞ்சாவூர் ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‘விவசாயிகள் நெல் விற்பனையை தடுக்கும் வகையிலும், நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். பழைய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் செய்திகள்
ஐம்பொன்சிலைகள் ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி
8வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு
இன்று நடக்கிறது சொத்து முன்விரோத தகராறு: பெரியப்பா கல்லால் குத்திக் கொலை
விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்: கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி: 142 மனுக்கள் பெறப்பட்டது
பாபநாசம் அரசு பெண்கள் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நீதிபதி பாராட்டு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!