வெள்ளாற்றில் மீண்டும் மணல் குவாரி துவங்க கோரி மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
12/28/2021 3:55:55 AM
அரியலூர்,டிச.28: செந்துறை அடுத்த சிலுப்பனூர் கிராமத்திலுள்ள வெள்ளாற்றில் நிறுத்தப்பட்ட மணல் குவாரியை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அசாவீரன்குடிக்காடு வட்டார மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கலெக்டரிடம் அளித்த மனுவில், கொரோனா தொற்று காரணமாக வெள்ளாற்றில் இயங்கி வந்த மணல் குவாரி நிறுத்தப்பட்டது. இதனால் மணல் குவாரியை நம்பி வாழ்ந்து வரும் மாட்டு வண்டி தொழிலாளர்களின் குடும்பங்கள், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு கூட தீவனம் வாங்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே, உடனடியாக மீண்டும் மணல் குவாரியை தொடங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நெல்அறுவடை முடிவடையும் வ ரை நெல் கொள்முதல் நி லையங்களை திறந்து வை த்து கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் சங் கம் வேண்டுகோள்
அரியலூரில் இன்று நடக்கிறது திமுக 15வது ஒன்றிய தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விதை தரத்தை அறிந்து விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்: வேளாண்மை அலுவலர் வேண்டுகோள்
தா.பழூர் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
குண்டும், குழியுமான சாலை கரூரில் முதன்முறையாக துவக்கம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்; அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்