தேசிய சித்த மருத்துவ தினவிழா
12/25/2021 12:39:34 AM
காரைக்கால், டிச.25: காரைக்காலில் உள்ள ஆயுஷ் மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில், அகத்தியரின் பிறந்த தினமான மார்கழி ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு ‘தேசிய சித்த மருத்துவ திருநாள்’ கொண்டாடப்பட்டது. இதையொட்டி சித்தர் வழிபாடு, சித்த மருத்துவ ஆலோசனை, வர்ம சிகிச்சை மற்றும் பாரம்பரிய உணவு கண்காட்சியும், இலவச முகக்கவசம், இலவச மருந்துகள் மற்றும் பாரம்பரிய உணவு வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர் தியாகராஜன் பேசும்பொழுது, சித்த மருத்துவப் பிரிவின் மூலம் காரைக்காலின் அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், சிகிச்சை தேவைப்படுபவர்கள் மருத்துவமனைக்கோ அல்லது சிறப்பு முகாம்களுக்கோ வருகை தந்து சிகிச்சை பெற்று பயனடையலாம் என்றும் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்தா மருந்தாளுனர் முத்தழகி செய்திருந்தார்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!