செங்கம் தாலுகா அலுவலகத்தில் பழங்குடியினர் வாழ்வாதாரம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
12/25/2021 12:31:38 AM
செங்கம், டிச.25: செங்கம் தாலுகா அலுவலகத்தில் பழங்குடியினர் வாழ்வாதாரம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. செங்கம் தாலுகா அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியின சமுதாயத்தினரின் வாழ்வாதாரம் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தாசில்தார் முனுசாமி, துணை தாசில்தார் வெங்கடேசன், பிடிஓக்கள் முருகன், ரபியுல்லா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, செங்கம் தாலுகாவில் பல்வேறு பகுதியில் வசித்துவரும் பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக களப்பணி செய்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி சாலைமறியல் 2 கி.மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள் லாரி மோதி படுகாயமடைந்த
திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை ₹110ஐ தொட்டது வாகனஓட்டிகள் கடும் அதிர்ச்சி
சேத்துப்பட்டு அருகே கிணற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு கொலை செய்து வீச்சா?.
செங்கம் அருகே 30 இருளர் இன குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க டிஆர்ஓ ஆய்வு
சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதி முதியவர் பலி
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!