சீர்காழி அருகே வள்ளுவகுடியில் விஏஓ பணியிட மாற்றம் கண்டித்து சாலை மறியல்
12/16/2021 3:47:02 AM
சீர்காழி, டிச.16: சீர்காழி அருகே வள்ளுவ குடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக திம்மராசு பணிபுரிந்து வந்தார். இவர்மீது நிவாரணம் வழங்கியதில் குற்றச்சாட்டு எழுந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக விஏஓ திம்மராசு தரங்கம்பாடி தாலுகாவிற்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் வள்ளுவகுடி கிராமத்தில் பணிபுரிந்த விஏஓ திம்மராசு வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்ததை கண்டித்தும், விஏஓ எந்த முறை கேட்டிலும் ஈடுபடவில்லை எனக் கூறியும் மீண்டும் வள்ளுவக்குடி கிராம நிர்வாக அலுவலராக பணியில் திம்மராசு பணியமர்த்த வலியுறுத்தியும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வள்ளுவகுடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த தாசில்தார் சண்முகம், சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் சீர்காழி-கொண்டல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!