செல்வீப் நகர் பகுதிக்கு நடைபாதை வசதி ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை
12/11/2021 1:09:50 AM
ஊட்டி, டிச. 11: செல்வீப் நகர் பகுதிக்கு நடைபாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி அருகேயுள்ள செல்வீப் நகர் பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் தோட்டி தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அருகில் உள்ள முத்தோரை பாலாடா, அதிகரட்டி போன்ற பள்ளிகளுக்கு சென்று பயன்று வருகின்றனர். காட்டேரி டேம் - முட்டிநாடு சாலையில் இருந்து இந்த கிராமத்தை இணைக்கும் பகுதி சுமார் 200 மீட்டர் தூரம் விவசாய நிலமாக உள்ளது. இது தனியார் நிலம் என்பதால், கடந்த 25 ஆண்டுகளாக நடைபாதை அமைக்க முடியாத நிலை உள்ளது.
இதனால், இந்த கிராம மக்கள் மழைக்காலங்களில் விவசாய நிலங்களுக்கு நடவே நடந்துச் செல்லும் போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பள்ளிச் செல்லும் குழந்தைகள் நாள் தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். செல்வீப் நகர் பகுதிக்கு நிரந்தர நடைபாதை வசதி ஏற்படுத்தத்தர வேண்டும் என அதிகரட்டி பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு இப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், யாரும் கண்டுக் கொண்டதாக இல்லை. இதனால், இந்த கிராம மக்கள் தற்போது கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதிக்கு கான்கிரீட் நடைபாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்ள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
பேப்பர் கப்புகளை பயன்படுத்திய தனியார் ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 21ம் தேதி ஊட்டியில் நடக்கிறது
அஞ்சலக வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் கோவையில் 28ம் தேதி நடக்கிறது
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற குந்தை சீமை பார்பத்திக்கு பாராட்டு விழா
அச்சத்தை போக்கும் வகையில் அரசு பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கு நூதன வரவேற்பு
காந்தல் சாலையில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்