5 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ விளக்கொளிப் பெருமாள் கோயிலில் தெப்பத் திருவிழா
12/9/2021 1:16:25 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் விளக்கொளிப்பெருமாள் கோயிலில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தெப்பத் திருவிழா நடந்தது. காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் பெருமாள் அவதரித்த கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்தில் தெப்பத்திருவிழா நடப்பது வழக்கம். மழையின்மை காரணமாக கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு தெப்பத்தில் போதுமான தண்ணீர் இல்லாததால் தெப்பத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் இந்தாண்டு பெய்த கனமழையால், விளக்கொளி பெருமாள் கோயில் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதையொட்டி, தெப்பத்திருவிழா நேற்று இரவு நடந்தது. ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் விளக்கொளிப்பெருமாள், மரகதவல்லி தாயார், தேசிகன் சுவாமிகள் ஆகியோர் இணைந்து சிறப்பு அலங்காரத்தில், தெப்பத்தில் 7 சுற்று வலம் வந்தனர். இதையொட்டி வாண வேடிக்கைகளும் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. விழாவில் திருக்கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன், குமரகோட்டம் சுப்ரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் உள்பட பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தேவாத்தூர் ஊராட்சியில் சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி; குளம் அருகில் இருப்பதால் பெற்றோர் அச்சம்: அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 பவுன் நகைகளை விட்டுச்சென்ற பெண்: கண்டுபிடித்து கொடுத்த காவலாளிக்கு பாராட்டு
வனத்துறை சார்பில் இன்று கருத்து கேட்பு கூட்டம்
கருங்குழியில் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!