மறுகால் பாயும் கண்மாய்கள்
12/7/2021 5:39:31 AM
திருவில்லிபுத்தூர், டிச. 7: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்திலேயே பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய், பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் நிரம்பியுள்ளது. திருவில்லிபுத்தூர்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த கலெக்டர் மேகநாதரெட்டி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் குடையை பிடித்து கொண்டு கண்மாய், குளங்களை பார்வையிட்டு செய்ய வேண்டிய முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.ஆய்வின் போது சிவகாசி சப்-கலெக்டர் பிருதிவிராஜ், நகராட்சி கமிஷனர் மல்லிகாஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி இளங்கோவன், தாசில்தார் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
பேரியம் உப்பு கலந்த பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
கஞ்சாவுடன் 3 பெண்கள் கைது
பட்டாசு ஆலைகளில் 3ம் நாளாக சிபிஐ அதிகாரிகள் தொடர் ஆய்வு
வத்திராயிருப்பு பேரூராட்சி கூட்டம்
பாம்பு கடித்து பெண் பலி
குண்டாசில் வாலிபர் கைது
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை