டெல்டாவை பேரழிவு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்
12/5/2021 3:15:22 PM
கும்பகோணம்,டிச.5: கும்பகோணம் அருகே பாபநாசத்தில் டெல்டா மாவட்டங்களை பேரழிவு மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என அமைச்சரிடம் முன்னோடி விவசாயி கோரிக்கை மனு அளித்தனர். கும்பகோணம் அருகே பாபநாசம் வருகை புரிந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கணபதியக்ரஹாரம் சேர்ந்த முன்னோடி விவசாயி சீனிவாசன் என்பவர் விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- இந்த வருடம் தமிழகமெங்கும் எதிர்பாராத வகையில் இடைவிடாது தொடர்ந்து மிக அதிக அளவில் வடகிழக்கு பருவமழை பெய்தது. மேலும் இன்னும் ஒரு மாத காலத்திற்கு மழை பெய்யக் கூடிய நிலையில் தமிழகம் இருக்கிறது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பல வழிகளில் பல மடங்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவில், குறிப்பாக நெல் மற்றும் காய்கறி பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் அனைத்து பயிர்களும் சேதமடைந்துள்ளது. நெல் பயிரை பொறுத்தவரை அதிக அளவில் டெல்டா மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. வயல்களில் கிட்டத்தட்ட 100 நாள் நெல் பயிர்கள் வளர வேண்டும்.
அதில் வயல்களில் 50 நாட்கள் மழை தண்ணீர் தேங்கி இருந்தால் அந்தப் பயிர்கள் எவ்வாறு விளைச்சல் தரும். கடந்த 50 நாட்களாக எந்த விவசாய பணிகளும் நடைபெறவில்லை. பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து கிராமங்களிலும் பெருமழை காரணமாக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களை பேரழிவு மாவட்டங்களாக அறிவிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஐம்பொன்சிலைகள் ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி
8வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தல்: திமுக சார்பில் முகமது இப்ராஹிம் சுல்தானா வேட்பு மனு தாக்கல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்ஐ பணிக்கான எழுத்து தேர்வு
இன்று நடக்கிறது சொத்து முன்விரோத தகராறு: பெரியப்பா கல்லால் குத்திக் கொலை
விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தல்: கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி: 142 மனுக்கள் பெறப்பட்டது
பாபநாசம் அரசு பெண்கள் பள்ளியில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நீதிபதி பாராட்டு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்