தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 படுக்கையுடன் ஒமிக்ரான் தனி வார்டு
12/5/2021 2:35:17 PM
தூத்துக்குடி, டிச.5: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 படுக்கை வசதியுடன் கூடிய ஒமிக்ரான் தனி வார்டு துவங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில கொரோனா தொற்றுக்கு 4பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் துவங்கி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைவில் ஒமிக்ரான் தனி வார்டு துவங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு கூறுகையில், தற்போது வெளிநாட்டில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம் வழியாக வெளிநாட்டினர் வர வாய்ப்புள்ளதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 10 படுக்கை வசதியுடன் கூடிய ஒமிக்ரான் தனி வார்டு துவங்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
மேலும் செய்திகள்
தூத்துக்குடி திருச்சிலுவை பள்ளியில் இன்றும், நாளையும் ஆதார் சேவை முகாம்
வருஷாபிஷேக விழா: சாயர்புரம் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் முகாம்
கோவில்பட்டி யூனியன் கூட்டம் 42 தீர்மானங்கள் நிறைவேற்றம்
கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கம்
திருச்செந்தூரில் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க புறவழிச்சாலை திட்டம்: அமைச்சர்கள் எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
பாண்டவர்மங்கலத்தில் ரூ.20 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்