விளத்தூரில் மருத்துவ முகாம் முருகேசன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
12/4/2021 5:25:40 AM
பரமக்குடி, டிச.4: பரமக்குடி அருகே உள்ள விளத்தூர் கிராமத்தில், கிராம ஊராட்சி சார்பாக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தலைமையேற்று துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் அருளானந்தம் வரவேற்றார். பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பரமக்குடி சுகாதார துணை இயக்குனர் கலைச்செல்வி, வட்டார மருத்துவர் தவமுருகன், பாம்பூர் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில், பொது மருத்துவம், கண் சிகிச்சை, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்நிகழ்ச்சியில், பரமக்குடி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரன், பரமக்குடி நகர பொறுப்பாளர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் அருளானந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சுகாதாரத்துறையினர், ஊரக உள்ளாட்சி துறை பணியாளர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்துகொண்டனர்.
இறுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காந்தி நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
மண்டபம் வந்த மீனவர்கள்
வாளுடன் சுற்றிய வாலிபர் கைது
பஸ் டிரைவர் கைது
மீன்பிடி தடைக்கால நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் மீனவர்கள் வலியுறுத்தல்
அவதூறு வழக்கிற்கு இடைக்காலத் தடை
திருவாடானை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோர காய்கறி கடைகள்
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!