பைக் மீது வாகனம் மோதி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பலி
12/3/2021 12:51:53 AM
ஓசூர், டிச.3: ஓசூர் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள செங்கோட்டை நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலுசாமி(34). மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான இவர், பெங்களூரு யூனிட்டில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த வேலுசாமி, சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், ஓசூர் ஹட்கோ போலீசார் விரைந்து சென்று வேலுசாமி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
கே.ஆர்.பி.அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ஓசூர் ஜி.ஹெச்சில் தலைமை மருத்துவருக்கு பிரிவு உபசார விழா எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
ஆந்திராவில் இருந்து சூளகிரிக்கு ₹1.50 லட்சம் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
டூவீலர் திருட்டு
கிருஷ்ணகிரியில் 47.4 மி.மீ மழை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!