முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சிறப்பு முகாம்
12/2/2021 3:21:04 AM
நெல்லை, டிச. 2: நெல்லை அகர்வால் கண் மருத்துவமனையின் சிறப்பு இலவச கண் பரிசோதனை முகாம், முன்னீர்பள்ளம் முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு கண்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான சிறப்பு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. விழி ஒளி ஆய்வாளர் இந்திர சுந்தரி, கண் நல ஆலோசகர் தாசன் ராஜ் மற்றும் மருத்துவ குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு கண்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
முகாமிற்கு முத்தமிழ் பள்ளி தலைவர் அமரவேல் பாபு, தாளாளர் ஜெயந்தி பாபு, முதல்வர் சோமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை முத்தமிழ் பள்ளி நிர்வாகிகள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் முதன்மை முகாம் மேலாளர் மாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
நெல்லை உடையார்பட்டி திருஇருதய ஆலய திருத்தல மாணிக்க ஆண்டு விழாவில் சப்பரபவனி
நெல்லை டவுனில் பொதுமக்கள் திடீர் மறியல்: 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகம்
விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி மேலவாசல் முருகன் கோயிலில் தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு
நெல்லையில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்
வயநாட்டில் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறை
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்