உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி
12/2/2021 1:23:46 AM
ஈரோடு, டிச. 2: ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி வாசகம் அடங்கிய பாதாகையில் கையொப்பமிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கோவிட் 19 தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 37 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ், எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் சிறந்த பங்களிப்பு வழங்கிய பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். நிகழ்ச்சியில், இணை இயக்குநர் கோமதி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நடக்கிறது
கலெக்டர் எச்சரிக்கை: கோபி வருவாய் கோட்டத்தில் ஓராண்டில் 1190 பழங்குடியினருக்கு சாதிச்சான்று விநியோகம்
தடைசெய்யப்பட்ட புகையிலை விற்றால் நடவடிக்கை
காஞ்சிக்கோயில் ஸ்ரீசீதேவி அம்மன் கோயில் தேர்த்திருவிழா
கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்
அரசு அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை