இருளர் மக்களுக்கு நிவாரணம்
12/2/2021 12:23:25 AM
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 23க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசிக்கின்றன. தற்போது பெய்து வரும் கனமழையால், இப்பகுதி இருளர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, அரிசி உள்பட நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நல்லூரில் நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார். ஒன்றிய அவை தலைவர் நல்லூர் ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.டி.அரசு, துணை தலைவர் எஸ்.ஏ.பச்சையப்பன் ஆகியோர் 23 இருளர் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதில், கவுன்சிலர் சஞ்சய், நெய்க்குப்பி ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன், துணை தலைவர் கதிரவன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அரிதினேஷ், திமுக நிர்வாகிகள் நல்லூர் பாபு, மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ரயில் மோதி இளம்பெண் பலி
தூசி மண்டலமாக இருந்த ஓஎம்ஆரில் புதிய தார் சாலை: மக்கள் மகிழ்ச்சி
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முகாம்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் விழுந்த மின்கம்பங்கள்
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!