தா.பழூர் ஒன்றிய அளவில் கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற பள்ளி மாணவி
4/23/2021 3:01:22 AM
தா.பழூர்,ஏப். 23: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற அரசு பள்ளி மாணவியை ஆசிரியர்கள் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வட்டார அளவில் எனது கனவு நூலகம், எனது கனவு பள்ளி எனும் தலைப்புகளில், 6,7,8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை போட்டி கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்ற கோவிந்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்த கருணாமூர்த்தி, விமலா தம்பதியின் மகள் விஜயலட்சுமி. இவர் அதே பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் விஜயலட்சுமி(12) கட்டுரை போட்டிகளில் பங்கு பெற்றார். இதில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது. இதனை பாராட்டி அவருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பிலான டேப், மற்றும் சான்றிதழும் பள்ளி தலைமை ஆசிரியரிடம், ஆசிரியர் பயிற்றுநர்கள் வழங்கினர். இதையடுத்து அப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், விஜயலட்சுமியை பாராட்டினர்.
மேலும் செய்திகள்
அதிமுக, பாமகவினர் திமுகவில் ஐக்கியம் விபத்தில் தொழிற்சங்க தலைவர் மூளை சாவு
மூளையில் கட்டி மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு கிராம இளைஞர்கள் நிதியுதவி
பெரம்பலூர் மாவட்டத்தில் போதைபொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தலித் கிறிஸ்தவர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!