வேதாரண்யத்தில் எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
4/23/2021 3:00:09 AM
வேதாரண்யம், ஏப்.23: வேதாரண்யத்தில் கோடைகால எள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆதனூர், அண்டர்காடு, கருப்பம்புலம், கரியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், செட்டிபுலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கரில் கோடைகால எள் சாகுபடி நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடி அறுவடை நிறைவுற்ற நிலையில் குறைந்த ஈரப்பதத்திலும், அதிக அளவு உரம் இடுதல் இல்லாமலும், பூச்சி தாக்குதல் இல்லாமலும், அதிக வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய எள் சாகுபடியை விவசாயிகள் ஆர்வமுடன் அதிகளவில் செய்து வருகின்றனர். தற்போது எள் செடிகள் நன்றாக வளர்ந்து பூத்தும், காய்த்தும் குலுங்கி வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் எள் சாகுபடியை விவசாயிகள் விரும்பி அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு கோடை மழை நன்றாக பெய்து உள்ளதால் எள் விளைச்சல் அமோகமாக இருக்கும் என எள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் புதை வட மூலம் மின் பாதை அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படும் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா பேட்டி
நாகப்பட்டினம் பழைய ஆயுதப்படை மைதானத்தில் திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் வாகனங்கள் சாம்பல்
பழையாறு துறைமுகத்தில் 5,000 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த ரயில் இன்ஜின் பழுது
சீர்காழி அருகே மகனை தந்தை கடத்தியதாக தாய் புகார்
செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேகம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!