தேசிய அளவிலான சிலம்ப போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு தங்கம், வெள்ளி பதக்கம்
4/23/2021 3:00:03 AM
மயிலாடுதுறை, ஏப்.23: தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி புதுடெல்லி தல்கதோரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சீக்கிய அமைப்பினரால் நடத்தப்பட்ட இப்போட்டியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில் பிரதானமாக சிலம்பப்போட்டிகள் 5 வயது முதல் 7 வயதுவரையிலும், 8 வயது முதல் 12 வயதுவரையிலும், 13 வயது முதல் 15 வயது பிரிவினருக்கும் நடைபெற்றது. இதில் தமிழகத்திலுருந்து சீர்காழி வீரத்தமிழர் சிலம்பாட்டக்கழகம் மற்றும் காரைக்கால் குமார் மார்ஷியல் ஆர்ட்ஸ் கழகத்தை சேர்ந்த மொத்தம் 54 வீரர்கள் கலந்துகொண்டனர். சீர்காழி வீரத்தமிர் சிலம்பாட்டக் கழகத்தை சேர்ந்த 9 பேர் தங்கப்பதக்கம் மற்றும் 8 வெள்ளிப்பதக்கங்களை பெற்றனர்.
6 வயது சிறுவன் அபித்ஹரி என்பவர் சிலம்பத்தில் தங்கப்பதக்கமும், சுருள்வாள் சுழற்றலில் வெள்ளிப்பதக்கமும் பெற்றார். இந்தப்போட்டியில் வெற்றிபெற்றவர்கள் சர்வதேசப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற 10 சிலம்பாட்ட வீரர்கள் பயிற்சியாளர் சுப்ரமணியன் தலைமையில் ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவை சந்தித்தனர். அப்போது கலெக்டர் லலிதா சிலம்பாட்ட வீரர்களை மேன்மேலும் பல வெற்றிகள் அடைய வாழ்த்தினார்.
மேலும் செய்திகள்
நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் புதை வட மூலம் மின் பாதை அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படும் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா பேட்டி
நாகப்பட்டினம் பழைய ஆயுதப்படை மைதானத்தில் திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் வாகனங்கள் சாம்பல்
பழையாறு துறைமுகத்தில் 5,000 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த ரயில் இன்ஜின் பழுது
சீர்காழி அருகே மகனை தந்தை கடத்தியதாக தாய் புகார்
செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேகம்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!