நாகையில் பதநீர் விற்பனை அமோகம்
4/19/2021 3:08:26 AM
நாகை, ஏப்.19: தமிழகத்தின் பானம் எனக்கூறப்படும் பதநீர் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே கிடைக்கும். தற்போது பதநீர் சீசன் தொடங்கியுள்ளதால் நாகையில் வேளாங்கண்ணி, தெற்குபெய்கைநல்லூர், பரவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனைமரங்களில் இருந்து அரசு அனுமதியுடன் பதநீர் இறக்குவதற்காக வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முதலில் பனைகளின் பாளைகளை சீவி நுனியில் வடியும் நீரை சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு சேகரித்ததே இனிப்புடன் கூடிய பதநீர் ஆகும்.
கோடை வெயிலின் தாகத்தை தணிக்க பல வகையான குளிர்பானங்கள் இருந்தாலும் பதநீர் போன்ற பானம் மிகவும் சிறந்தது. கோடை காலத்தில் ஏற்படும் நீர்கடுப்பை நீக்கும் சிறந்த பானம் இது. ஒரு லிட்டர் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாகைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி பதநீர் வாங்கி பருகி செல்கின்றனர். சிலர் தங்களது வீடுகளுக்கும் வாங்கி செல்கின்றனர்.
மேலும் செய்திகள்
செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேகம்
வேதாரண்யம் அரசு கல்லூரியில் சேர மாணவிகள் அதிக ஆர்வம்
செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கான தொகை கேட்டு விவசாயிகள் காத்திருப்பு
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை நாகப்பட்டினம் ஆட்சியர், சிறந்த கலெக்டராக தேர்வு
ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!