தபால் வாக்கு தொடர்பாக பெண் அலுவலரிடம் தகராறு செய்தவருக்கு குண்டாஸ்
4/19/2021 1:36:35 AM
ராமநாதபுரம், ஏப்.19: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகா குடிமை பொருள் வழங்கல் அலுவலர் சத்யபாமா. இவர் அபிராமம் அருகே செய்யாமங்கலம் கிராமத்தில் 80 வயது கடந்த 10 பேரின் தபால் வாக்கு சீட்டுகளை எடுத்துக் கொண்டு காரில் சென்றார். இந்த தபால் வாக்குகளில் செய்யாமங்கலம் சுப்ரமணியனின் தபால் ஓட்டை அவரது மருமகள் இந்து ராணி பதிவு செய்தார். அந்த ஓட்டை யாருக்கு பதிவு செய்தார் என காண்பிக்கச் சொல்லி சத்யபாமாவிடம், சுப்ரமணியனின் இளைய மகன் சண்முகவேல் வாக்கு வாதம் செய்து, சத்யபாமாவின் கார் கண்ணாடியை உடைத்தார்.இதுகுறித்து அபிராமம் போலீசில் சத்யபாமா புகார் அளித்தார். இந்த வழக்கில் சண்முகவேல், கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் பரிந்துரையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி சண்முகவேலை(44) அபிராமம் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!