டாஸ்மாக் கடையில் தகராறு ஒருவர் கைது, 2 பேர் ஓட்டம்
4/19/2021 1:36:30 AM
பரமக்குடி, ஏப்.19: பரமக்குடி அரசு மதுபான கடையில், இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஓருவர் கைது செய்யப்பட்டார். பரமக்குடி சந்தைக்கடை பகுதியைச் சேர்ந்த சந்துரு, இவரது நண்பர்கள் மணி, சதீஷ் ஆகியோர் உரப்புளி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது அருந்தினர். அப்போது, அவர்களுக்கு எதிரே உலகநாதபுரம் பகைவென்றி கிராமத்தைச் சேர்ந்த செல்வம், அவரது நண்பர் முனியசாமி ஆகியோர் மது அருந்தியுள்ளனர்.
அப்போது சந்துரு மதுபோதையில் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை எதிர்த்து கேட்ட செல்வத்தை, கம்பு மற்றும் கற்களால் சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் மணி,சதீஷ் தாக்கியுள்ளனர். இது குறித்து, செல்வம் கொடுத்த புகாரின் பேரில், பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர். தப்பி ஓடிய மணி, சதீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். சந்துருக்கு ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
100 ஆண்டுகளாக தொடரும் சமூக நல்லிணக்கம் மொஹரத்தையொட்டி பூக்குழி இறங்கிய இந்துக்கள்
தண்ணீரை அதிகளவு சேமிக்க பருவமழைக்கு முன்பே கண்மாய்கள் தூர்வார வேண்டும்
வாலிபர் மீது தாக்குதல்
ஆன்லைனில் பணம் இழப்பை தடுக்க விழிப்புணர்வு வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
ஏ.புனவாசல் பஞ்சாயத்தில் தினமும் குடிநீர் வழங்க வேண்டும் கிராமமக்கள் வலியுறுத்தல்
பரமக்குடியில் நெசவாளர்களுக்கு ரூ.14 லட்சம் கடன்
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!