சின்னாளப்பட்டியில் வேளாண் கண்காட்சி
4/19/2021 1:31:40 AM
சின்னாளபட்டி, ஏப்.19:விவசாயிகளுக்கு வெங்காயம் சேமிப்புக் கிடங்கு, ஆற்றலற்ற குளிர்அறை அமைப்பது குறித்து கண்காட்சியில் மாணவர்கள் விளக்கினார்கள். வேளாண் கண்காட்சியை நூற்றுக்கணக்கான விவசாயிகள் பார்வையிட்டனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் உதவி இயக்குநர் கே.கணேசன், கல்லூரி முனைவர் முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி கிராமங்களில் தங்கி விவசாயிகள் பயிரிடும் முறைகளை ஆய்வு செய்து வருகின்றனர். பழைய செம்பட்டியில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் சச்சின்லயோலா, மகேந்திரன், முத்துக்குமார், பிரவீன்குமார், ரெங்கசாமி, துக்டன்செராப் ஆகியோர் வடிமைத்த வெங்காய சேமிப்புக் கிடங்கு நிலப்போர்வை (மாதிரி) ஆற்றலற்ற குளியலறை அமைப்பது எப்படி என குறித்த மாதிரிகளை வேளாண் கண்காட்சியில் வைத்திருந்து விவசாயிகளுக்கு விளக்கினார்கள். செம்பட்டி மற்றும் ஆத்தூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட்டதோடு, மாணவர்களையும் பாராட்டினார்கள். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி உதவி பேராசிரியர் குமரன் கண்காட்சியை பார்வையிட்டு சிறப்புரை ஆற்றினார். மாணவர் பிரவீன்குமார் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
தேசிய கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கண்வலி கிழங்கு விதைகளை கொள்முதல் செய்திட வேண்டும் பிரதமர் அலுவலகத்தில் தமிழக எம்பிக்கள் கடிதம்
நடுவனூரில்
திண்டுக்கல் ஜங்ஷனில் மரக்கன்று நடும் விழா
பழநியில் தபால் ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
நத்தத்தில் காங்கிரசார் நடைபயணம் துவக்கம்
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!