வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது
4/19/2021 1:09:08 AM
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி, கூலி தொழிலாளியாக வேலை செய்பவர் சச்சின் (25). இவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த 3 பேர் சச்சினை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்த செல்போன், பணத்தை பறிக்க முயன்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த 3 பேரும், அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த கணேஷ் (19), விக்னேஷ் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
பெண்ணை சரமாரி தாக்கி வீட்டை அபகரிக்க முயன்ற ரவுடி உள்பட 2 பேர் கைது
ரயில்கள் ரத்து
பிளஸ் 1 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது
கர்நாடகத்தில் இருந்து ஒரத்தநாடு திருமண விழாவிற்கு வந்த 3.6 டன் அழுகிய இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
திருமணமான ஒன்றரை ஆண்டில் புதுப்பெண் தற்கொலை: போலீசில் தந்தை புகார்
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.53 கோடியில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம்: துணை மேயர் தகவல்
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை