சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது
4/19/2021 1:08:21 AM
பல்லாவரம்: சண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரரை சரமாரி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பம்மல், நாகல்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிரபல பார்சல் சர்வீஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஆவடியை சேர்ந்த ரமேஷ் (43), வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ரமேஷ் வேனில் பார்சல்களை ஏற்றிக்கொண்டு, அவற்றை உரிய இடத்தில் விநியோகம் செய்ய அனகாபுத்தூர் காமராஜபுரம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று, வேனின் பக்கவாட்டில் உரசியது. இதில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனே, ஆட்டோவில் இருந்த 6 பேர், ரமேஷிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, அந்த வழியாக வந்த, சங்கர் நகர் காவல் நிலைய காவலர் கண்ணன், சண்டையை விலக்கி விட முயற்ச்சி செய்தார். ஒருகட்டத்தில், ஆட்டோவில் வந்த ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த தினேஷ் (25), காவலர் கண்ணனை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த கண்ணன் அளித்த புகாரின் பேரில், சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தினேஷை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
மும்பையில் வாங்கி சென்னையில் விற்பனை; வாட்ஸ்அப் மூலம் போதை மாத்திரை ஊசி சப்ளை செய்த இருவர் கைது: 1300 மாத்திரை, 15 ஊசி பறிமுதல்
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
சாலை தடுப்பில் பைக் மோதி மகன் பலி; தந்தை படுகாயம்
வாலிபரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பைக்கில் விரட்டி பிடித்த எஸ்ஐ: சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் மக்கள் அவதி
வயதை மறைத்து திருமணம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது: போக்சோவில் கணவன் கைது
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை