தொட்டியத்தில் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் வாக்குறுதி
4/1/2021 6:54:32 AM
தொட்டியம், ஏப்.1: முசிறி தொகுதி திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் காட்டுப்புத்தூர், சீத்தப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவர் பேசும்போது, தொட்டியம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் வகையில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.
மேலும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு துணையாக நான் இருப்பேன்.
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை சட்டசபைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பேசினார். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து வாக்குகள் கேட்டார். அவருக்கு விவசாயிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். ஒன்றிய செயலாளர் திருஞானம், நகர செயலாளர் கங்கா மனோகரன், நிர்மலா சந்திரசேகரன், ஒன்றியக் குழுத் தலைவர் புனித ராணி, துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, நிர்வாகிகள் எஸ். கே. எஸ் .பழனிவேலு,சரவணன், ஆறுமுக ராஜா,உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
அதிகாரிகள் திடீர் ஆய்வில் அதிரடி சிறைவாச ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ்
ஜி.ஹெச் வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு
நர்சிங் மாணவி தற்கொலை
மயங்கி விழுந்து காவலாளி சாவு
திருச்சி மாவட்டத்தில் 8.3 டன் விதைகள் விற்க தடை விதிப்பு
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்