தா.பழூர் அருகே இருகையூர் மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
3/26/2021 6:54:36 AM
தா.பழூர், மார்ச் 26: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இருகையூர் கிராமத்தில் அமைந்துள்ளது மகா சக்தி மாரியம்மன் கோயில். இக்கோயிலில் கற்பக விநாயகர், மகாசக்தி மாரியம்மன், பாலசுப்பிரமணியர், கன்னியம்மன், கருப்பசாமி, வடிவுடையம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மகாசக்தி மாரியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 23ம் தேதி காலை மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களுடன் துவங்கியது. தொடர்ந்து 24ம் தேதி 2ம்கால, 3ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10.45 மணியளவில் மகாசக்தி மாரியம்மன் விமான கோபுர கலச அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் இருகையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி
திருமானூர் பகுதியில் கரும்பு பயிர்களில் பூஞ்சான நோய் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மணல்மூட்டைகள் தயார் செய்யும் பணி தீவிரம்
குழந்ைத திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்
ஜெயங்கொண்டம் அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!