வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ
3/20/2021 6:12:49 AM
வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்புகிருஷ்ணகிரி, மார்ச் 20: வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் முருகன் எம்எல்ஏ நேற்று கள்ளுக்குறிக்கி ஊராட்சி பொஜ்ஜேகவுண்டன்புதூர் கிராமத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்புளித்தனர். அப்போது, தொழுகை முடிந்து திரும்பிய இஸ்லாமிய மக்களிடம் பேசிய அவர், சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக திமுக இருக்கிறது. மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினருக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி, அதை முழுவீச்சில் நிறைவேற்ற காத்திருக்கிறார்.
எனவே, அவர் முதல்வர் நாற்காலியில் அமர அனைவரும் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும். அதன்மூலம் உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றிட நான் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது, மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, வேப்பனஹள்ளி ஒன்றிய செயலாளர் ரகுநாத், அணிகளின் துணை அமைப்பாளர்கள் சதாசிவம், சிவக்குமார், சண்முகம் மற்றும் திமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்
ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!