திருவையாறுக்கு முதல்வர் வருகையால் திருமானூரில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 3 மணி நேரம் காத்திருப்பு
3/18/2021 4:40:46 AM
அரியலூர், மார்ச் 18: திருவையாறு தொகுதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையால் திருமானூரில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மேலும் அரை மணி நேரம் நோயாளியுடன் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் திணறியது. தஞ்சை மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணியளவில் பிரசாரம் செய்தார். இதற்காக, அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் வடபுறம் லாரிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காலை 9.30 மணியளவில் கொள்ளிடம் சோதனை சாவடி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.இதற்கிடையில் அரியலூர் பகுதியிலிருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் திருமானூரில் சுமார் அரை மணி நேரம் நோயாளியை வைத்துக்கொண்டு போக வழியின்றி திணறியது. பின்னர் மாற்றுப்பாதையில், ஊருக்குள் புகுந்து தஞ்சைக்கு ஆம்புலன்ஸ் சென்றது. காலை 9.30 மணிக்கு ஏற்பட்ட போக்குவரத்து தடை மதியம் 12.30 மணி வரை நீடித்தது. இதனால் பயணிகள் மற்றும் வாகனஓட்டிகள் பெரிதும் வெறுப்படைந்தனர்.
மேலும் செய்திகள்
அரசு சிமென்ட் ஆலையில் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து வெல்டர் பலி
2 நாட்களுக்கு பின் சடலம் மீட்பு கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் யாகம்
மகள் பாலியல் பலாத்காரம் தந்தை குண்டாசில் கைது
அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
மக்காச்சோளப்பயிரில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை