தேர்தல் பயிற்சிக்கு செல்லும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை ஆசிரியர் சங்கம் கோரிக்கை
3/13/2021 1:53:06 AM
நாமக்கல், மார்ச்13: தேர்தல் பயிற்சிக்கு செல்லும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என, முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தற்போது தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் அறிவித்தார். உயர்கல்வி படிக்க செல்லும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு உறுதியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்யும் வகையில், பாடங்களை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல், ஏப்ரல் 6ம்தேதி நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு, வரும் 14ம்தேதி நாமக்கல் மாவட்டத்தில் முதல் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.
பள்ளிகள் திங்கள் முதல் சனி வரை 6 நாட்களும் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 6 நாட்கள் பள்ளி பணி, 7வது நாளில் தேர்தல் பயிற்சி வகுப்பு என, வாரத்தின் 7 நாட்களும் பணி நாளாக உள்ளது. எனவே, இனி வரும் சனிக்கிழமைகளில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும். மேலும், சனிக்கிழமைகளில் விருப்பமுள்ள முதுகலை ஆசிரியர்கள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
பரமத்திவேலூரில் வாகன தணிக்கையில் 50 பேருக்கு நோட்டீஸ்
கொல்லிமலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் பொன்னுசாமி எம்எல்ஏ வழங்கினார்
கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிக்க தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த முடிவு கலெக்டர் தகவல்
புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ₹30 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
மாவட்டத்தில் பரவலாக மழை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!