மகளிர் தின விழா கொண்டாட்டம்
3/9/2021 4:12:02 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நேற்று சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வித்யாசாகர் கல்விக் குழுமங்களின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். வித்யாசாகர் கல்விக் குழுமங்களின் இயக்குநர். பி.ஜி ஆச்சார்யா அறிமுகவுரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. ஷாலினி கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் ஆர். அருணாதேவி ஆகியோர் சிறப்புறையாற்றினர். விழாவில் மகளிர் தின சிறப்பு குறித்து காணொலி காட்சி காட்டப்பட்டது. மாணவியர்களின் திறன்களை அறியும் விதமாக நடனம், யோகா, மற்றும் கராத்தே பயிற்சிகள் செய்து காட்டப்பட்டன. 2020-21 ஆண்டிற்கான பேரவையின் பொறுப்பாளராக ச.காயத்ரியும் பேரவைத் தலைவியாக பி. நம்ரதா, துணை பேரவைத் தலைவியாக கே.வைஷாலினி பொருளாளராக ஜி.எஸ்.ருபிபிரிதிஷா, துணைப் பொருளாளராக கே. அக்ஷயா, பொதுச் செயலாளராக டீ.லதா, துணைச் செயலாளராக ஷாலோம்ரோஸ் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை மீன் சந்தையில் மீன் சந்தையில் குவிந்த பொதுமக்கள்: கொரோனா பரவும் அபாயம்
திருப்போரூர் பேரூராட்சியில் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா: அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல்
வெவ்வேறு பகுதிகளில் சம்பவம் சிறுவன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலி
திருப்போரூர் ஒன்றியம் மயிலை ஊராட்சி செயலர் மீது தாக்குதல்: போலீஸ் விசாரணை
ராமானுஜர் பிறந்தநாளையொட்டி தலசயன பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
மணி விழா கண்ட அரசு பள்ளியில் வெள்ளி விழா கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!