பட்டாசு ஆலை விபத்துகளால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது தடுக்க ஏஐடியுசி கோரிக்கை
3/5/2021 2:53:37 AM
விருதுநகர், மார்ச் 5: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஏஐடியுசி தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சமுத்திரம் தலைமையில் மனு அளித்து கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு ஆலைகளை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது. பட்டாசு ஆலைகளில் நடக்கும் தொடர் விபத்துக்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.விபத்தில்லா பட்டாசு தொழிலை உருவாக்க பட்டாசு ஆலைகளை லீசுக்கு விடுவதை தடை செய்ய வேண்டும். பட்டாசு ஆலைகளை லீசுக்கு எடுத்தவர்கள் ஒவ்வொரு ரூமையும் லீசுக்கு விட்டு பணம் பார்க்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு தொழிலில் தற்போதுள்ள பீஸ்ரேட் கூலி முறையை ரத்து செய்து மாத சம்பள முறைக்கு மாற்ற வேண்டும்.பேன்சி ரக பட்டாசு தயாரிக்க தனி லைசென்ஸ், தனி தொழிற்சாலை
ஏற்படுத்த வேண்டும்.
மாதம் ஒரு முறை தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். குறைந்த பட்ச கூலி ரூ.500 வீதம் மாதம் ரூ.15 ஆயிரம் குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். மணிமருந்து தினசரி உற்பத்திக்கு ஏற்பட தயாரிக்க வேண்டும். ஸ்டாக் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையில்லாத காலங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். சஸ்பெண்டாகும் ஆலைகளின் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திமுக உட்கட்சி தேர்தல் சிவகாசி மாநகர பொறுப்புகளுக்கு இன்று விருப்ப மனு பெறப்படும் மாநகர திமுக பொறுப்பாளர் தகவல்
சிவகாசியில் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்
அரசு அருங்காட்சியகத்தில் ஆக.14ல் மாணவர்களுக்கு மாறுவேட போட்டி 1 முதல் 8 வரை படிப்போர் பங்கேற்கலாம்
ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!