சட்டமன்ற தேர்தல் எதிரொலி கட்சிக் கூட்டங்கள் வீடியோவில் பதிவு
3/4/2021 3:24:11 AM
தர்மபுரி, மார்ச் 4: தர்மபுரியில் நடக்கும் தேர்தல் தொடர்பான அரசியல் கூட்டங்களை, தேர்தல் அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்கின்றனர். சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது, தேர்தல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் நடத்தும் தேர்தல் தொடர்பான கட்சி கூட்டங்களை, தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி வீடியோவில் பதிவு செய்கின்றனர். குறிப்பாக, நேற்று தர்மபுரி மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில், என்ன நடக்கிறது என்பதையும், கட்சியினர் பேசுவதையும் தேர்தல் அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்தனர். தர்மபுரி தொகுதிக்கு ஒரு வீடியோ பதிவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அரசியல் கூட்டங்களை வீடியோவில் பதிவு செய்கின்றனர். இதேபோல் பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளிலும் நடக்கும் கூட்டங்களை தேர்தல் அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்கின்றனர்.
மேலும் செய்திகள்
சாலை விதிகள் குறித்து படங்களுடன் விழிப்புணர்வு
ஒரே நாளில் 146 பேருக்கு கொரோனா
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அரசு பஸ்கள் மார்க்கம் வாரியாக இயங்கும் நேரம்
மின் இணைப்பு தருவதாக கூறி பணம் வசூலித்தால் நடவடிக்கை
தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி
தீ தொண்டு நாள் விழிப்புணர்வு
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்