திங்கள்சந்தை வருகை ரத்து குமரியில் ராகுல்காந்தி சுற்றுப்பயணத்தில் மாற்றம்
2/26/2021 3:41:36 AM
திங்கள்சந்தை, பிப்.26: ராகுல்காந்தி திங்கள்சந்தை வருகை ரத்தானதால் இளைஞர் காங்கிரசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மார்ச் 1ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார். அப்போது இங்குள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்திக்கிறார். அவரது சுற்றுப்பயணம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் சில தினங்களுக்கு முன் நடந்தது. அப்போது அவர் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், தக்கலை, அழகியமண்டபம், திருவிதாங்கோடு வழியாக திங்கள்சந்தை, குளச்சல், கருங்கல், களியக்காவிளை செல்வதாக திட்டமிடப்பட்டது.
இதில் குளச்சல் சட்டமன்ற தொகுதியின் மையப்பகுதியான திங்கள்சந்தையில் அவர் பொதுமக்களை சந்திப்பார் என கூறப்பட்டது. இதையடுத்து அவரை வரவேற்கும் பணியில் சிறப்பான ஏற்பாடுகளை வட்டார காங்கிரசார், இளைஞர் காங்கிரசார் ஈடுபட்டு வந்தனர். திங்கள்சந்தையில் ராகுல் காந்தி பேசுகிறார் என குருந்தன்கோடு, முக்கலாம்பாடு, திங்கள்சந்தை, மயிலோடு, நெய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் போர்டுகள், போஸ்டர்கள் ஒட்டி விளம்பரங்கள் செய்திருந்தனர். மேலும் நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்களை திரட்டும் பணியிலும் இளைஞர் காங்கிரசார் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் திடீரென, ராகுல் காந்தி சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி அவர் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், தக்கலை, முளகுமூடு, திக்கணங்கோடு வழியாக குளச்சல் செல்வார் என மாற்றியமைக்கப்பட்டது. இது ஏற்கனவே திங்கள்சந்தையில் பல ஆயிரம் செலவு செய்து ராகுல்காந்தியை வரவேற்க ஏற்பாடுகள் செய்து வந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தியிடம் முறையிடவும் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
கொரோனா பாதித்தவர்கள் டாக்டர் அனுமதி இருந்தால் மட்டுமே வீடுகளில் இருந்து சிகிச்சை பெற முடியும் ஆணையர் ஆஷாஅஜித் பேட்டி
சிங்கப்பூர் சரக்கு கப்பல் உரிமையாளரிடம் இருந்து ₹100 கோடி நஷ்டஈடு பெற வேண்டும் மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 18,403 ஆக உயர்வு நாகர்கோவிலில் இதுவரை 4800 பேருக்கு தொற்று
வருமா, வராதா என தெரியாமல் குமரியில் தடுப்பூசி மையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் 2வது டோஸ் போட வேண்டிய தேதி கடந்ததால் பீதி
கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்கியதில் முறைகேடு
பிளஸ் 2 செய்முறை தேர்வில் பணியாற்றிய ஆசிரியருக்கு கொரோனா
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்