வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேர் கைது
2/25/2021 5:15:26 AM
வேலூர், பிப்.25: வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு ₹3 ஆயிரம், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹5ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் 2016ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நேற்று முதல் காலவரையற்ற குடியேறும் போராட்டத்தை தொடங்கினர். வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று முன்தினம் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு மாற்றுத்திறனாளிகள் அலுவலக வளாகத்தில் தங்கினர். தொடர்ந்து, 2ம் நாளாக நேற்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலூர் அண்ணா சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தெற்கு போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகள்
அரக்கோணம் இரட்டை கொலையில் மேலும் ஒரு வாலிபர் கோர்ட்டில் சரண்
குடியாத்தம் அருகே 2வது நாளாக 23 காட்டுயானைகள் அட்டகாசம் அதிகாலையில் பரபரப்பு
வேலூர் மாவட்ட நீதிபதிகள் 8 பேர் பணியிட மாற்றம்
(வேலூர்) கெங்கை அம்மன் கோயிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்தது குடியாத்தத்தில் கொரோனா தொற்று அச்சம்
கே.வி.குப்பம் சந்தை மேட்டில் தடையை மீறி நடந்த வாரச்சந்தையில் சமூக இடைவெளி இன்றி குவிந்த மக்கள் கொரோனா பரவும் அபாயம்
மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் முகக்கவசம் வினியோகம்
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்