ரங்கம் ரங்கநாதர் கோயிலில் தெப்பத்திருவிழா
2/23/2021 5:37:25 AM
திருச்சி, பிப்.23: ரங்கம் ரெங்கநாதர் கோயில் தெப்பத்திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 15ம் தேதி தொடங்கி இன்றுடன் (23ம் தேதி) நிறைவடைகிறது. தெப்பத்திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பஉற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளினார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 9ம்-நாளான இன்று (23ம் தேதி) பந்தக்காட்சியுடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோயில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் மாயம்
ஏடிஜிபி ஆய்வு
மணப்பாறை நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ
மணப்பாறையில் குடிநீர் கேட்டு குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
போலி ஆவணங்கள் தயார் செய்து 2.80 ஏக்கர் நிலம் அபகரிப்பு வழக்கில் மேலும் 5 பேர் கைது
தொட்டியத்தில் இளம்பெண் மர்மசாவு 2 வாலிபர்கள் கைது: கணவருக்கு வலை
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!