250 ஆண்டு ஆலமரம் வேரோடு வெட்டி சாய்ப்பு திரும்ப நட்டு பராமரிக்க மனு
2/23/2021 5:12:02 AM
நாமக்கல், பிப்.23: நாமக்கல் அடுத்த கோனூரை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் அளித்த மனு விபரம்: கோனூரில் 250 ஆண்டுகள் பழமையான ஆலமரம், ஊரின் அடையாளமாக இருந்து வந்தது. மரத்தின் காய்ந்த கிளைகளை அப்புறப்படுத்த டெண்டர் எடுத்தவர்கள், இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத போது மரத்தை வேரோடு வெட்டி சாய்த்து விட்டனர். மரத்தை வெட்ட பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை மடக்கி, விஏஓவிடம் ஒப்படைத்தோம். ஆனால் மரத்தை வெட்டியவர் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாரியை விடுவிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. எனவே, வெட்டிய இடத்திலேயே மரத்தை நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பரவலாக மழை
விவேகானந்தா மகளிர் கல்லூரிகளில் ஆண்டுவிழா
தென்னை விவசாயிகளுக்கு மானியம்
1,107 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
வேளாண் அறிவியல் நிலையத்தில் உழவர் திருவிழா, கண்காட்சி
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை