கொரோனா தொற்று தடுப்பு எச்சரிக்கையால் திருவையாறு காவிரி ஆறு வெறிச்சோடியது
2/12/2021 3:50:20 AM
திருவையாறு,பிப்.12: கொரோனா தொற்று தடுப்பு எச்சரிக்கையால், திருவையாறு காவிரி ஆற்றில் தர்பணம் செய்ய பொதுமக்கள் வராததால், வெறிச்சோடியது. பக்தர்களின்றி தீர்த்தவாரி மட்டும் நடந்து. திருவையாறு ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து 1000க்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து திருவையாறு காவிரி ஆற்று புஷ்யமண்டப படித்துறையில் புனித நீராடி படித்துறையில் அமர்ந்திருக்கும் புரோகிதர்களிடம் தர்பணம் செய்து திதி கொடுத்து, ஐயாறப்பரை வழிபட்டு செல்வது வழக்கம். கொரோனா தொற்று பரவல் அதிகமாகி உள்ள காரணத்தினால் பொதுமக்களின் நலன் கருதி, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவையாறு பகுதிகளில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் பொதுமக்கள் யாரும் புனித நீராட, தர்பணம் செய்வதற்கும் தடை விதித்திருந்தனர். இதனால் நேற்று தை அமாவாசை தினத்தில் தர்பணம் செய்ய பொதுமக்கள் யாரும் செல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டது. மதியம் ஐயாறப்பரை கோவிலிருந்து சாமி புறப்பட்டு புஷ்யமண்டப காவிரி ஆற்று படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரி முடிந்து சாமி புறப்பட்டு கோயிலுக்கு சென்றது.
மேலும் செய்திகள்
சுவாமிமலை கோயில் இடங்களில் டிஜிட்டல் சர்வேயுடன் கல் புதைக்கும் பணி
பேராவூரணி அரசு கல்லூரியில் முத்தமிழ் பயிலரங்கம்
எம்எல்ஏ ஆய்வு அமைச்சர் பொன்முடி பேச்சு தஞ்சாவூர் அருகே அம்மன் கோயில் விழாவில் தகராறு இருதரப்பை சேர்ந்த 8 பேர் கைது
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மனோரா சுற்றுலாத்தலத்தில் மேம்பாட்டு பணிகள்
வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்
தமிழக அரசு ஏற்றுகின்ற தீர்மானத்தை ஆளுநர் பரிந்துரைக்க அவசியம் இல்லை என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்