குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி மண்டல அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம்
1/28/2021 3:08:53 AM
திருப்பூர், ஜன.28: திருப்பூரில் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி குமரானந்தபுரம் பகுதி மக்கள் 1வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று கண்டனஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் மாநகராட்சி குமரானந்தபுரம் 9வது வார்டைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் அனுப்பர்பாளையத்தில் உள்ள 1-வது மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எங்களது பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில், சாந்தி தியேட்டர் பஸ் நிறுத்தமும் உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சாந்தி தியேட்டர் எதிர்புறம் உள்ள சுடுகாட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் கிடக்கு 3 மாதமாக செயல்பட்டு வருகிறது.இதனால் எங்கள் பகுதியில் ஈ மற்றும் கொசு தொல்லைகள் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, இதைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். குப்பைக் கிடங்கை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அலுவலகத்திலும் மனு அளித்தனர்.
மேலும் செய்திகள்
சீரான குடிநீர் வினியோகம் கேட்டு பொதுமக்கள் மறியல் முயற்சி
திருப்பூர் மாநகரப்பகுதியில் 2 மாதத்தில் 10 பேர் குண்டாசில் கைது
வடக்கு தொகுதி வேட்பாளர்கள் 24 மணி நேரத்தில் பிராசார அனுமதி பெற என்கோர் ‘ஆப்’ அறிமுகம்
திருப்பூர் வீரப்பசெட்டியார் நகரில் செல்போன் டவரை அகற்றக்கோரி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
மதுபானம் பதுக்கல், போலி மது கண்டறிய தீவிர தணிக்கை
மதுபானம் பதுக்கல், போலி மது கண்டறிய தீவிர தணிக்கை
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்