தவில் வித்வான் மயங்கி விழுந்து சாவு கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில்
1/28/2021 12:43:54 AM
கே.வி.குப்பம், ஜன.28: கே.வி.குப்பம் அருகே திருமண நிகழ்ச்சியில் தவில் வாசித்து கொண்டிருந்த வித்வான் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். வேலூர் மாவட்டம், காட்பாடி மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி(65), தவில் வித்வான். இவர் நேற்று முன்தினம் கே.வி.குப்பம் அடுத்த பி.கே.புரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் தவில் வாசிக்க சென்றார். இரவு 10 மணியளவில் மணமக்கள் அழைப்பின்போது தவில் வாசித்து கொண்டிருந்த வித்வான் பிச்சாண்டி திடீரென மயங்கி விழுந்தார். மண்டபத்தில் இருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ேக.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து பிச்சாண்டி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணமக்கள் அழைப்பின்போது தவில் வித்வான் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
மேலும் செய்திகள்
வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சிஎஸ்ஆர் கொடுக்காமல் புகார்தாரர்களை அலைக்கழித்த எழுத்தர் ஆயுதப்படைக்கு மாற்றம்
கார் மோதி 2 மூதாட்டிகள் பலி குடியாத்தம் அருகே சோகம் 100 நாள் வேலைக்கு சென்று திரும்பியபோது
வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே 4வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
அரசு பஸ் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பொதுமக்கள் கடும் அவதி; தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதல்
கால்நடை மருத்துவக்குழு தீவிர ஆய்வு வேலூர் பாலாற்றில் செத்து மடிந்த 7 ஆயிரம் வாத்துகளுக்கு வைரஸ் தொற்று
வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பேர் கைது
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!