டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதா?
1/27/2021 4:13:41 AM
மணப்பாறை ஜன. 27: மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் பிரமுகரை நேற்று எம்பி கார்த்தி சிதம்பரம் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: குடியரசு தினத்தில் டெல்லியில் நடந்த சம்பவங்களை பார்க்கும்போது உண்மையாகவே இது குடியரசு தினமா என சந்தேகம் எழுகிறது. வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் பேரணியாக வரும்போது காவல்துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் போராடுபவர்களுடன் பேசி ஒருமுடிவெடுத்து இருக்க வேண்டும். 10 முறை பேசியும் விடாப்பிடியாக இருக்கின்ற பாஜ அரசு காட்டு மிராண்டித்தனமாக விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. 2019ம் ஆண்டு எம்பி தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ, அதேபோல் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.பேட்டியின்போது மாநில செயலாளர் ரமேஷ்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
வாலிபர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
க்ரைம் செய்திகள் கட்சி கொடி, போஸ்டர்கள் அகற்றம் ரங்கம் தொகுதியிலும் வெற்றி பெற்று மக்கள் பலத்துடன் திமுக ஆட்சி அமைக்கும்
இவ்வாறு அவர் கூறினார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு பேட்டி தேர்தல் பாதுகாப்பு பணி 96 மத்திய ஆயுதப்படை வீரர்கள் திருச்சி வருகை
திருமண மண்டபம், விடுதி உரிமையாளர்களுக்கு
தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறை ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது கோரிக்கை மனு போட பெட்டி வைப்பு மறைக்கப்படாத கல்வெட்டு அம்பேத்கர், பெரியார் சிலையை மறைக்க எதிர்ப்பு
கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவான வாலிபர் கஞ்சா விற்றபோது சிக்கினார் 3.50 கிலோ பறிமுதல்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்