குடியரசு தினவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு
1/27/2021 4:12:00 AM
தர்மபுரி, ஜன.26: குடியரசு தினவிழாவையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் 72வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. தர்மபுரியில் உள்ள விளையாட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கார்த்திகா தேசிய கொடியேற்றி வைக்கிறார். இதனையொட்டி, மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். தர்மபுரி, மொரப்பூர், பாலக்கோடு மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் பிளாட்பாரங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். தர்மபுரி வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
தர்மபுரியில் அனைத்து கட்சி கூட்டம் உளவுத்துறை, துப்பறிவு பிரிவு போலீசாரை மாற்ற வேண்டும்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தர்மபுரியில் போலீசார் கொடி அணிவகுப்பு
தர்மபுரி மாவட்டத்தில் மது விற்பனை, கடத்தலை தடுக்க அதிகாரிகள் நியமனம்
ஊதிய உயர்வு வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
உலர்களம் அமைத்து தர வலியுறுத்தல்
தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்