ஆலங்குடி ஊராட்சியில் குடியரசு தினவிழா
1/27/2021 4:11:21 AM
வலங்கைமான். ஜன. 27: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஊராட்சியில் குடியரசு தின விழா ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் காந்திமதி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி ஊராட்சிமன்ற தலைவர் மோகன் பேசுகையில். ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, கடை உரிமம் கட்டணம் ஆகியவற்றை குறித்த காலத்திற்குள் செலுத்தி ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும்,சாலை ஓரங்களில் குப்பைகளை தேங்க விடாமல் சுகாதாரமாக வைத்திருக்கவும் எதிர்வரும் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ரோஜாப்பு, மதுபாலா,மஞ்சுளா, ரவி, சித்ரா, கீர்த்தனா, ராணி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் குமரவேல் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
நன்னிலம் தொகுதியில் 35 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தயாராக உள்ளது
அரசு மருத்துவர் தகவல் கள்ள தொடர்பை கண்டித்த வக்கீலை கத்தியால் குத்தியவரை கைது செய்யக் கோரி முற்றுகை
எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு திருவாரூர் மாவட்டத்தில் கணக்கில் வராத தொகை, பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை
வாக்களிக்க பணம், பொருள் பெறுவதை தவிர்க்க வேண்டும்
கலெக்டர் அறிவுறுத்தல் தேர்தல் அலுவலர் தகவல் திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 11,000 பேருக்கு தடுப்பூசி
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!