சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் குடியரசு தினவிழா
1/27/2021 4:02:00 AM
நாகை, ஜன. 27: நாகை மாவட்டம் பாப்பாக்கோவிலில் இயங்கி வரும் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆனந்த் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருவாரூர் லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநர் துரைவேலன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி கல்வி நிறுவனங்களின் செயலாளர் மகேஸ்வரன் பேசினார். சர் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முருகதாஸ் வரவேற்றார். விழாவில் அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் குமார் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
சாக்கு பற்றாக்குறையால் 16,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேக்கம்
தேர்தல் விதிமுறை மீறி போஸ்டர் ஒட்டிய விசி நிர்வாகிகள் மீது வழக்கு
கலெக்டர் தகவல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் 150 ஆண்டுகளுக்கு பிறகு கீரங்குடி குடவரசி அம்மன் கோயிலில் தெப்ப திருவிழா
வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமான பண பரிவர்த்தனை கண்காணிக்கப்படும்
3 பறக்கும் படைகள் அமைப்பு வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக விடையாற்றி விழா
நாகை மாவட்டத்தில் 48 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை