கோயில்களில் தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து தரிசனம் செய்ய வேண்டும்
1/27/2021 3:59:54 AM
கரூர், ஜன. 27:கரூர் கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தைப்பூச விழாவிற்கு குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில், வெண்ணைமலை முருகன் கோயில், மற்றும் பாலமலை முருகன்கோயில் உட்பட அனைத்து கோயில்களுக்கும் வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொரனோ நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுவான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் உள்ள இடங்களில் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலையை கண்டறிய வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்த பின்னர்தான் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாதைகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் ஒலி, ஒளி பதிவுகளை இடைவிடாமல் ஒளிப்பரப்ப வேண்டும்.கோயிலில் பஜனைக்குழு, பக்தி இசைக்குழு போன்றவைகளை நேரில் பாட அனுமதிக்க கூடாது. மாறாக பதிவு செய்யப்பட்ட பக்தி இசை, பக்தி பாடல்கள் ஒலிக்கலாம்.
கோயில் வளாகத்தை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக, கழிவறைகள், கை மற்றும் கால் கழுவும் இடங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கோயில் உட்புறம் மற்றும் சுற்று பிரகாரங்களில் 1 சதவீதம் சோடியம் ஹைபோகுளோரைடு கரைசல் 3மணி நேரத்துக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.பக்தர்கள் விட்டுச் சென்ற பொருட்களை பாதுகாப்பாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். காவல்துறையினர் கோயில்களுக்கு வரும் அனைத்து பக்தர்களையும் நெறிப்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்கவும், கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடுகள் செய்து, அதிக பக்தர்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பக்தர்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து செல்ல வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு
எஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா
குளித்தலை அருகே பெண் தற்கொலை
குளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
கரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்
அரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்