டூவீலர் மீது லோடு ஆட்டோ மோதல்
1/27/2021 3:59:26 AM
கடவூர்,ஜன.27: கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள குளக்காரன்பட்டி யை சேர்ந்த துரைக்கண்ணு மகன் காளியப்பன் கூலி வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் குளக்காரன்பட்டி யிலிருந்து தனது மனைவி மாலதியுடன் இருசக்கர வாகனத்தில் தரகம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பசுபதிபாளையம் என்ற இடத்தில் லோடு ஆட்டோ டூவீலரில் மோதியது. இதில் காளியப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அங்கிருந்து மதுரை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார் இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு
எஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா
குளித்தலை அருகே பெண் தற்கொலை
குளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
கரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்
அரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்