டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
1/27/2021 3:59:19 AM
கரூர், ஜன. 27: கரூர் வாங்கப்பாளையம் அருகே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் வாங்கப்பாளையம் பகுதியில் இருந்து ஜவஹர் பஜார் வரை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இரண்டு சக்கர வாகன பேரணி நடத்தும் வகையில், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் நேற்று வாங்கப்பாளையம் பகுதியில் ஒன்று சேர்ந்தனர். அந்த பகுதிக்கு வந்த வெங்கமேடு போலீசார், பேரணிக்கு அனுமதியில்லை என தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, எல்பிஎப் நிர்வாகி அண்ணாவேலு தலைமையில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்து பின்னர் கலைந்து சென்றனர். ஒரு கோடிக்கும் மேற்பட்டுள்ள விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டத்துக்கு மதிப்பளித்து, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். அனைவருக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் செய்திகள்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரவக்குறிச்சியில் துணை ராணுவம், போலீசார் கொடி அணிவகுப்பு
எஸ்.பி. துவக்கி வைத்தார் அரசு அருங்காட்சியகத்தில் உலக வனஉயிரி தினவிழா
குளித்தலை அருகே பெண் தற்கொலை
குளித்தலை, அரவக்குறிச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
கரூர் அரசு கல்லூரி நூலகத்திற்கு விளையாட்டு, உடற்பயிற்சி சம்பந்தமான புத்தகங்கள்
அரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்