போலீசார் ரோந்து பணியை கண்காணிக்க `இ-பீட்’ ஆப்
1/27/2021 3:49:42 AM
மதுரை, ஜன. 27: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாநகர் போலீசாரின் ரோந்துப்பணிகளை கண்காணிக்க `இ-பீட்’ என்ற மொபைல் ஆப் மற்றும் புதிய ஒளிரும் விளக்குகள் பொருத்திய 15 நான்கு சக்கர மற்றம் 27 இருசக்கர ரோந்து வாகனங்களை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த இ-பீட் ஆப் மூலம் போலீசார் மேற்கொள்ளும் ரோந்துப்பணிகளை, இன்ஸ்பெக்டர்கள் திறம்பட கண்காணிக்க முடியும். மேலும், முதியவர்கள் தனியாக வசிக்கும் வீடுகள், பூட்டிக்கிடக்கும் வீடுகளை கண்காணிக்கவும் இந்த ஆப் பயன்படுத்தப்படும்’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாநகர துணைக்கமிஷனர்கள் சிவபிரசாத் (சட்டம்-ஒழுங்கு), பழனிக்குமார் (குற்றப்பிரிவு), சுகுமாறன் (போக்குவரத்து), பாஸ்கரன் (தலைமையிடம்), சோமசுந்தரம் (ஆயுதப்படை), மாநகர நுண்ணறிவு பிரிவு உதவிக்கமிஷனர் சிவகுமார் மற்றும் அனைத்து உதவிக் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மதுரையில் கொரோனா மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்
திருமண மண்டபத்துக்கு பூமி பூஜை
வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக டிஜிட்டல் போர்டுகள் கடைகள், வீடுகளில் கட்டுகின்றனர்
சேடபட்டி-திருமங்கலம் மார்க்கத்தில் கதிரடிக்கும் களமானது சாலை போக்குவரத்துக்கு வாகன ஓட்டிகள் அவதி
துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு