கண்கள் தானம்
1/27/2021 3:33:27 AM
கோவை, ஜன. 27: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தந்தையின் கண்கள் தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி அருகேயுள்ள கோதவாடி கிராமத்தை சேர்ந்தவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் திட்ட இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. தற்போது தமிழ்நாடு அறிவியல் மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவரது தந்தை மயில்சாமி (86) பீளமேட்டில் வசித்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு காரணமாக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் திங்கட்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது கண்கள் தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
தி ஐ பவுண்டேஷன் சார்பில் உலக குளுக்கோமா வாரம்
ஞாயிற்றுக்கிழமையும் கொரோனா தடுப்பூசி
விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
மயானம் சீரமைக்க ரூ.40 லட்சம் செலவு
தேர்தல் பொருட்களுடன் கொரோனா கிட்
உள் ஒதுக்கீடு ஆணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!
08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்